இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை இன்றுடன் அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் விடுமுறை காலத்திலும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவேண்டும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று கொத்தணிகளாக உருவாகி வரும் இன்றைய சூழலில், வெளிமாவட்டங்களிலிருந்து சென்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய கால சூழ்நிலையை கூட கருத்தில் கொள்ளாமல், பொலித்தீன் திரையின் பின்னால் அலுவலகங்களில் தம்மை பாதுகாக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுத்து இருக்கவும் இல்லை.
எனவே, விடுமுறை காலங்களில் எந்தவொரு ஆசிரியரும் பாடசாலைகளுக்கு செல்லத்தேவையில்லை. விடுமுறை காலங்களில் ஏற்படும் அதிகாரிகள் எவரினதும் அச்சுறுத்தல் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறையிட முடியும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.