Tuesday, November 29, 2016

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் கல்வி அதிகாரி யார்?


யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகம் ஒ;ன்றில் - கறுப்புக் கண்ணாடி அறைக்குள் இருக்கும் அதிகாரி ஒருவரால் - பல ஆசிரியைகள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தி வருவதாக - அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் - பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் - மத்திய கல்வி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக – உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் வைத்து அவரால்; தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களுள் கறுப்புக் கண்ணாடியின் பின் ஒளிந்திருந்து செயற்படும் - அந்த கேவலமான வலயக் கல்வி அதிகாரி யார்? அந்த அதிகாரியை வடமாகாணக் கல்வியமைச்சு உடனடியாக கண்டறியவேண்டும்.
பாதிக்கப்படும் ஆசிரியைகள் - தமது குடும்ப, சமூக நிலைகளால் – பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களை – தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்படும் குறித்த அதிகாரி எவ்வித தயவும் இன்றி தண்டிக்கப்படவேண்டும்.
வடமாகாணத்தின் கல்விப் புலத்தினை அச்சுறுத்தி – தனது பாலியல் இச்சைக்கு அடிபணியவைக்கும் அந்த அதிகாரக் களங்கம் கல்விப்புலத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.
இதற்கு உடனடியாக நீதியான விசாரணைகளை நடத்தி வடமாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.