Thursday, June 15, 2017

இன்று (16.06.2017) பூரண ஹர்த்தால் - பாடசாலைகள் இயங்காது – வதந்திகளை நம்பவேண்டாம்


வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் செயற்பாட்டை கண்டித்து  இன்று (16.06.2017) தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் - வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்கிவரும் நிலையில் - இதனை முறியடிக்கும் நோக்கில் - வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனவே திட்டமிட்டபடி இன்று – பாடசாலைகள் இயங்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கமும், புதிய அதிபர் சங்கமும் உறுதிப்படுத்துகின்றது.  

நாளைய (16.06.2017) ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் ஆதரவு



வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டை கண்டித்து நாளை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்குவதாக புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் நேதாஜி தெரிவித்தார்.
நாளை (16.06.2016) பாடசாலை செயற்பாடுகளை நிறுத்தி – அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் நிற்குமாறும். பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாது – வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை – நாளை காலை 10.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடுசெய்யப்பட்ட - முதலமைச்சருக்கு ஆதரவாக நல்லூரில் ஒன்றுகூடும் செயற்பாட்டில் பொதுமக்கள், அதிபர் ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறும் வடமாகாண புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.  

நாளை (16.06.2017) ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு - வடமாகாண பாடசாலைகளை பகிஸ்கரிக்குமாறு கோரிக்கை


வடமாகாண சபை உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம்  வடமாகாண முதலமைச்சரை அகற்றும் தமிழரசுக் கட்சியின் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் - தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் முதலமைச்சராக்கப்பட்டவரை – அமைச்சர்களின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக – மக்களின் அபிப்பிராயம் இன்றி தூக்கியெறிய முற்படும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் - மக்கள் மயப்பட்ட போராட்டமாக -  தமிழ் மக்கள் பேரவையால் நாளை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவை வழங்குகின்றது. இதற்காக நாளைய தினம் வடமாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஸ்தம்பிக்கச்செய்து அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும். அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து விடுமுறையில் நிற்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

Wednesday, June 14, 2017

வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அரசியல்வாதிகளல்ல. இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு


வடமாகாணத்தில் அமைச்சுக்களின் முறைகேடுகளை குறிப்பிட்டு -அமைச்சரவை மாற்றத்தை கோரி முன்னர் 16 வடமாகாண ஆளும் கட்சியினர் கையெழுத்திட்டு வழங்கியிருந்ததுடன் முறைகேடுகளை விசாரிக்கக்கோரி வடமாகாண முதலமைச்சரையும் வற்புறுத்திவந்தநிலையில் - விசாரணையில் அமைச்சர்களின் முறைகேடுகள் வெளிவந்த நிலையில் - முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றபோது இன்று வடமாகாண முதலமைச்சரை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மக்கள் ஊழலற்ற ஆட்சிகளையே எப்போதும் விரும்புவர். விசாரணை குழுவின் அறிக்கையை விட மக்களின் மனோநிலைக்கமையவே - குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களை தமது பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானம் மக்களுக்கெதிரானதாகவே அமையும். பல உயிர் தியாகங்கள் நடந்தேறிய தமிழ் மண்ணில் - அமைச்சுப்பதவியை கூட தியாகம் செய்யமுடியாத நிலைக்கு சென்றுள்ளமை வேதனையான விடயமாகும்.
நல்லாட்சி என கூறி கால்பதித்த அரசாங்கமே வாக்குறுதி அளித்தும் மக்களை ஏமாற்றிவரும் வேளையில் - முன்னுதாரணமாக செயற்பட்ட வடமாகாண முதல்வரை நீக்கும் செயற்பாடு - விக்னேஸ்வரணையே முதலமைச்சராக நம்பி ஏகோபித்த வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதி என்பதை வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கின்றோம்.
13 வது திருத்தச்சட்டத்துக்கு மேலாக அதிகாரத்தைக்கோரும் வட மாகாணசபை - தனது கொள்கைகளை மீறி - மாகாணசபையின் முதலமைச்சரையே நீக்கக்கோரி ஆளுநரிடம் கேட்கின்றமை தமக்கு வாக்களித்த மக்களை மலினப்படுத்தும் செயலாகும்.
வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அதுவே உயர்ந்தபட்ச ஜனநாயகமும் ஆகும். எனவே - வடக்கு மக்களின் அபிப்பிராயம் இன்றி முதல்வர் விக்னேஸ்வரன் அகற்றப்படுவாரானால் - ஊழல்வாதிகளுக்கு எதிரான -முதலமைச்சருக்கு ஆதரவான வெகுஜனப்போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கும் என்பதை தெரிவிக்கின்றோம்.

Thursday, June 8, 2017

வடமாகாண சபையின் நீதியான ஆட்சி தத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.

வடமாகாண சபையின் அமைச்சுக்கள் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில் - அதனை மூவரடங்கிய விசாரணைக்குழுவை நியமித்து விசாரணைக்குட்படுத்திய வடமாகாண சபையினைப் பாராட்டுகின்றோம். தமது ஆட்சியில் ஊழலை முற்றாக ஒழித்து - ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி - நல்லாட்சி வேடம் அணிந்து ஆட்சி ஏறிய அரசாங்கமே - ஊழல்வாதிகளை காப்பாற்றும் வேளையில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பாக - ஊழல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு வந்தவேளை -அதனை விசாரணைக்குட்படுத்தி குற்றங்களை கண்டறிந்த வடமாகாணசபையின் முன்னுதாரணமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர்சங்கம் வரவேற்கின்றது. 
இவ்விடயம் சார்பாக - வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டமல்லாமல் - வடமாகாண கல்வியமைச்சின் பல முறைகேடுகள் எமது சங்கத்தாலும் பலதடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தபட்டு வந்துள்ளன.
அன்றும் இன்றும் வடமாகாண மக்கள் கல்விமேல் அக்கறை கொண்டவர்கள். கொடூரமான யுத்த சூழ்நிலைகளில் கூட வடக்கு மக்கள் கல்வியின் முக்கியத்தும் பேணிவந்துள்ளனர். வடக்கில் கல்வியின் பின்தங்கிய நிலைக்கு வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளே காரணம் என நாம் கூறிவந்த நிலையிலும் - தற்போது விசாரணையில் ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே - வடமாகாண கல்வியினை பாதுகாக்கும் நோக்கில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பான விசாரணை குழுவின் பரிந்துரையை வடமாகாணசபை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். இதுவே வடமாகாணசபையின் நீதியான ஆட்சித்தத்துவத்தை நிலைநாட்டும் செயற்பாடாக அமையும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


Thursday, June 1, 2017

நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் நான்கு லட்சம் கட்டிய பணிப்பாளர் மாலினி வெனிற்றன்: விசாரணை பற்றி கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.


தற்போது மடு கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெளிற்றன் - முன்னர் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகவிருந்து – அவருக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் - விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
இவ்விசாரணை இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிதி மோசடி தொடர்பாக – விசாரணைக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன?, விசாரணைக் குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்ன? என்பது தொடர்பாக - இதுவரை வடமாகாண கல்வியமைச்சால் வெளியிடப்படாத நிலையில் - அவர் மடு வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் – ஏறத்தாள நான்கு இலட்சங்கள் பணமாக செலுத்தி பற்றுச்சீட்டு வழங்கிய பின்னரே நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றோம்.
எனவே – திருமதி மாலினி வெனிற்றனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் - விசாரணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு  - எடுத்த நடவடிக்கை தொடர்பாக வடமாகாண கல்விச் சமூகத்துக்கு வடமாகாண கல்வியமைச்சு தெளிவுபடுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.