Friday, July 22, 2016

தரம்பெற்ற அதிபர்களுக்கான பாடசாலைகளை வழங்கக்கோரி தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தரம்பெற்ற அதிபர்களுக்கான பாடசாலைகளை வழங்குவதில் ஏறபடும் தாமதத்தைக் கண்டித்தும், உடனடியாக பொருத்தமான பாடசாலைகளை வழங்கக்கோரியும் நாடளாவிய ரீதியில் தலைநகர் கொழும்பில் ன்று (22.07.2016) ஒன்று கூடினர் தரம் 3 பெற்ற புதிய அதிபர்கள்.

இலங்கையின்  அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  அதிபர்கள்  ஒன்று கூடித் தமது உரிமைக்காகப் போராடினர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் 
விஹாரமாதேவி பூங்காவில் ஆரம்பித்து நடைபவனியாக  பிரதமர் அலுவலகத்தை அடைந்தது.




பிரதமர்  அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்இதன்போது - மூன்றாம் தவணை ஆரம்பிக்கும்போது பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கு பாடசாலை வழங்கப்படவேண்டும் எனவும்அநாவசியமாக அரசியல் ரீதியான - அதிபர்சேவை பிரமாணக்குறிப்புக்கு மாறாக எந்தவொரு நியமனமும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளதாகவும்இவை மீறப்படும் சந்தர்ப்பத்தில் - தரம்பெற்ற சகல அதிபர்களையும் நாடளாவிய ரீதியில் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Saturday, July 16, 2016

போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த புதிய தரம் - 3 அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல் - 19.07.2016


இலங்கையில் அண்மையில் புதிதாக பரீட்சைமூலம் நியமனம் பெற்ற தரம் - 3 அதிபர்களுக்கு இதுவரை பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படவில்லை. அதிபர் தரத்துக்குத் தகுதியான பயிற்சிகளைப் பெற்ற நிலையிலும் - தற்போதும் ஆசிரியர்களாகவே கடைமையாற்றிவருகின்றனர். புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் - புதிய தரம்பெற்ற அதிபர்களிற்கு பொருத்தமான நியமனங்களை வழங்குவதில் கரிசனை கொள்ளாது – அரசியல் நலன்களுக்காக தேவையற்ற விடயங்களிலேயே கரிசனை கொண்டுள்ளது.
எதிர்வரும் 22.07.2016 மீண்டும் அமைச்சரவை உபகுழு - அதிபர் நியமனம் தொடர்பாக கூடி ஆராயவுள்ள நிலையில் - தகுதியான அதிபர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தீர்மானம் எடுப்பதற்கு செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக – வடமாகாணத்தில் உள்ள - அதிபர் தரம் 3 போட்டிப்பரீட்சை மூலம் சித்தியடைந்து - பயிற்சிபெற்ற அனைவரையும் எதிர்வரும் 19.07.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு - இல 372 பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தில்; அமைந்துள்ள ஈ-சிற்றி ஆங்கில பாடசாலையில் ஒன்று கூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.