Saturday, September 15, 2018

கல்வியமைச்சும் தொழிற்சங்களும் இணைந்த - முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.


அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாக – கல்வியமைச்சும், தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினது முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்றது.
கடந்த 12.09.2018 அன்று அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் - ஆலோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்று சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக காலையில் – கல்வியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது - கல்வியமைச்சினாலும் சம்பள ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன் வரைபு வழங்கப்படவேண்டும் எனவும் -  அதனை தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தயாரிக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கைவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய – கல்வியமைச்சும் தொழிற்சங ;கப் பிரதிநிதிகளையும் உள்ளடங்கியதாக குழு அமைக்கப்பட்டது. இக்குழு – தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலங்களை உள்ளடக்கியதாக இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்குழுவின் முதலாவது தமிழ்மொழி மூல அமர்வு - இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கல்வியமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இக்குழுவில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட தலைவர் தேவராசா செந்தூரனும் குழுவில் அங்கத்துவராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினால் - மேற்கொள்ளப்படவுள்ள ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன்வரைபு விரைவில் சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

Tuesday, September 11, 2018

தொழிற்சங்க கூட்டமைப்பால் சம்பள முரண்பாடுகள் குறித்த பரிந்துரை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு



இலங்கை அதிபர், ஆசிரியர் சேவையிலுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பாக நீக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய பரிந்துரை –இலங்கை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று 11.09.2018 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணியளவில் சம்பள மறுசீரமைப்பு  ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்பதாக – காலையில்; தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் - கல்வியமைச்சின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது  அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து கல்வியமைச்சும் - தொழிற்சங்கங்களும் இணைந்து ஆலோசித்து சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் - ஓய்வு பெற்ற கல்வியமைச்சு அதிகாரி S.U. விஜயரத்ன தலைமையில் தொழிற்சங்க உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்;பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

முதன் முதலாக - இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பு 1994 இல் உருவாக்கப்பட்டது. இவை தொழிற்சங்கங்களுடன் இணைந்தே உருவாக்கப்பட்டது. ஆனால் - 1997 ஆம் ஆண்டு V.C. பெரேரா சம்பள ஆணைக்குவின் பரிந்துரைகளால் பாரிய சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டன. அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு லயனல் பெர்னாண்டோ, சாலிய மத்தியூஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையிலமைந்த சுற்றறிக்கையினாலும் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக தொழிற்சங்கப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாகவே - இந்த சம்பள முரண்பாடுகளை நீக்கும் வழிமுறைகளை – கல்வியமைச்சும் தொழிற்சங்கங்களும் இணைந்து சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.