Friday, January 12, 2018

தவறான செய்தி பிரசுரித்தமை தொடர்பாக – உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்


பிரதம ஆசிரியர்,
உதயன் பத்திரிகை.
யாழ்ப்பாணம்.
13.01.2018



தவறான செய்தி பிரசுரித்தமை தொடர்பானது


இன்றைய 13.01.2018 ஆம் திகதி சனிக்கிழமை தங்கள் உதயன் பத்திரிகையின் 6 ஆம் பக்கத்தில்
“கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடனேயே பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன என – 
இலங்கை ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கை விளக்கமில்லாத ஒன்றே!
வடமாகாண கல்வி அமைச்சர் காட்டம்”

என தலைப்பிடப்பட்டு வெளிவந்த செய்தி  - இலங்கை ஆசிரியர் சங்கமாகிய எமக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செய்தியாக   அமைந்துள்ளது.
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடன் பரீட்சைகள் நடத்தப்படுவது தொடர்பாக "இலங்கை ஆசிரியர் சங்கம்" - எவ்வித விமர்சனங்களையும் முன்வைத்திருக்கவில்லை. என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
இவ்விடயம் தொடாபாக – வடமாகாண கல்வியமைச்சர் கௌரவ சர்வேஸ்வரனுடன் - தொடர்பு கொண்டபோதும் கூட – தான் இலங்கை ஆசிரியர் சங்கத்தைக் குறிப்பிட்டு எவ்விதமான கருத்தும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே – “இலங்கை ஆசிரியர் சங்கம்” தொடர்பாக – உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தவறானது என்பதுடன் -
இச்செய்தி தொடர்பாக தெளிவை ஏற்படுத்துமாறும். தங்கள் பத்திரிகையின் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்