Wednesday, April 21, 2021

போக்குவரத்து சபைக்கு எதிரான ஆசிரியர்கள் போராட்டம் வெற்றி: நாளை தொடக்கம் வழமைபோல் போக்குவரத்து நடைபெறும் என பணிப்பாளர் தெரிவிப்பு

 



நுவரெலியா மாவட்டதின் ஹங்குரன்கெத்த இவலப்பனை ஆகிய கல்வி வலயங்களில் அமைந்துள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலைகளான மாகுடுகல, ஹயிபொரஸ்ட் விவேகானந்த, ஹயிபொரஸ்ட் 3, பிரமிலி, அல்மா கிரமன்ட், சீட்டன்.கோணகலை பாரதி, கோணப்பிட்டிய பிரின்சிஸ் , எலமுல்ல, கபரகல, அருணோதயம்  ஆகிய பாடசாலைகளுக்கு இராகலை, நுவரெலியா, உடுப்புசல்லா ஆகிய நகங்கலிருந்து 100 ரூபா தொடக்கம் 250 ரூபா வரையிலும் ஒரு வழி பயணத்திற்காக செலுவு செய்து 200க்கு  மேற்பட்ட ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த  பல வருடங்களாக இராகலை பிரதேசத்திருந்து 6.45 மணிக்கு புறப்படும் நுவரெலியா (டிப்போ ) பொது போக்குவரத்து பஸ்போக்குவரத்துஇ  கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பல சிரமங்களை எதிர்நோக்கிய  ஆசிரியர்கள்  பல தடவைகள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கவனதிற்கு  கொண்டுவந்திருந்த போதும் அற்பகாரணங்களை முன்வைத்து, அதிகாரிகள் நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை  . எனவே 2021.04.21 ஆம் திகதி இன்று காலை 7மணி தொடக்கம் 10 மணிவரை கவனயீர்ப்பு போராட்டதினை புரூக்சைட் சந்தியில் ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தனர் . 5000 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதுகாக்குமாறும்இ மக்களின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்துமாறும், கோரிகைகள்  முன்வைக்கப்பட்டன . 

மாதாந்தம் 10000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டு பணியாற்றும் உதவி ஆசிரியர்கள் இ முச்சக்கர வண்டிகளுக்கு 600 ரூபா தொடக்கம் 700 ரூபா வரையில் செலுத்தி தினமும் வீடுசெல்லவேண்டியுள்ளதாக கவலையுடன்  குறிப்பிட்டனர்.  குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமும்  பங்குபற்றியதுடன் போக்குவரத்து அமைச்சர் இ நுவரெலியா பயணிகள் போக்கு வரத்து சபை பணிப்பாளார் ஆகியோரின் கவனதிற்காக கடிதங்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் அனுப்பியிருந்தது. அத்துடன்  குறித்த ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு  உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தொலைபேசி மூலமாக பணிப்பாளாருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது சபையினை கூட்டி முடிவெடுப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

சற்றுநேரத்துக்கு முன்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட நுவரெலியா பயணிகள் போக்குவரத்து சபையின் பணிப்பாளார்,  நாளை தொடக்கம் வழமை போல் போக்குவரத்து சேவையை மேற்க்கொள்வதற்கு சபை கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.