Saturday, July 16, 2016

போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த புதிய தரம் - 3 அதிபர்களுக்கான அவசர கலந்துரையாடல் - 19.07.2016


இலங்கையில் அண்மையில் புதிதாக பரீட்சைமூலம் நியமனம் பெற்ற தரம் - 3 அதிபர்களுக்கு இதுவரை பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படவில்லை. அதிபர் தரத்துக்குத் தகுதியான பயிற்சிகளைப் பெற்ற நிலையிலும் - தற்போதும் ஆசிரியர்களாகவே கடைமையாற்றிவருகின்றனர். புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவும் - புதிய தரம்பெற்ற அதிபர்களிற்கு பொருத்தமான நியமனங்களை வழங்குவதில் கரிசனை கொள்ளாது – அரசியல் நலன்களுக்காக தேவையற்ற விடயங்களிலேயே கரிசனை கொண்டுள்ளது.
எதிர்வரும் 22.07.2016 மீண்டும் அமைச்சரவை உபகுழு - அதிபர் நியமனம் தொடர்பாக கூடி ஆராயவுள்ள நிலையில் - தகுதியான அதிபர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தீர்மானம் எடுப்பதற்கு செய்யவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக – வடமாகாணத்தில் உள்ள - அதிபர் தரம் 3 போட்டிப்பரீட்சை மூலம் சித்தியடைந்து - பயிற்சிபெற்ற அனைவரையும் எதிர்வரும் 19.07.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு - இல 372 பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணத்தில்; அமைந்துள்ள ஈ-சிற்றி ஆங்கில பாடசாலையில் ஒன்று கூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment