Saturday, September 15, 2018

கல்வியமைச்சும் தொழிற்சங்களும் இணைந்த - முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.


அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாக – கல்வியமைச்சும், தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினது முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்றது.
கடந்த 12.09.2018 அன்று அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் - ஆலோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்று சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக காலையில் – கல்வியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது - கல்வியமைச்சினாலும் சம்பள ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன் வரைபு வழங்கப்படவேண்டும் எனவும் -  அதனை தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தயாரிக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கைவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய – கல்வியமைச்சும் தொழிற்சங ;கப் பிரதிநிதிகளையும் உள்ளடங்கியதாக குழு அமைக்கப்பட்டது. இக்குழு – தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலங்களை உள்ளடக்கியதாக இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்குழுவின் முதலாவது தமிழ்மொழி மூல அமர்வு - இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கல்வியமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இக்குழுவில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட தலைவர் தேவராசா செந்தூரனும் குழுவில் அங்கத்துவராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினால் - மேற்கொள்ளப்படவுள்ள ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன்வரைபு விரைவில் சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment