Tuesday, October 8, 2019

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; நாளை மேலுமொரு அமைச்சரவைப்பத்திரம்!



கல்வியமைசாசின் செயலாளருக்கும் அதிபர், ஆசிரியர் தொழில் சங்கங்களுக்குமிடையில் இன்று 08.10.2019 மாலை சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்வியமைச்சு, தொழிற்சங்கங்களுடனான சந்திப்பு சம்பள ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை 09.10.2019 நடைபெறவுள்ள அமைச்சரவையில் சம்பள சீராக்கம் குறித்த கடந்த அமைச்சரவை தீர்மானத்தின் விரிவாக்கம் குறித்து கல்வியமைச்சால் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அவசியமற்ற தாள்கள் நிரப்பும் செயற்பாடு குறித்தும் தெளிவான சுற்றறிக்கையொன்று கல்வியமைச்சால் வெளியிடப்படவுள்ளது.

தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் வழங்குவது தொடர்பாகவும் எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment