Sunday, August 1, 2021

ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு 

 கல்வி அமைச்சின் செயலாளரால் ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு தெரிவித்து கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் ED /09/12/06/01/02/2021இலக்க கல்வியமைச்சின் கடிதத்தின் படி சமூகமளிக்க மாட்டார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கூட்டாக கையொப்பம் இட்டு கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை தொடங்காமல் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது ஆசிரியர்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கம் கொண்ட அரசின் கபட நாடகம் எனவும், அதிபர் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அதிபர், ஆசிரியர் அடிபணியாமல், அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்தில் அனைவரும் கரம் கோர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment