Wednesday, June 29, 2016

புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் ஆர்பாட்டம்

புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு ஏற்படும் தாமதத்தைக் கண்டித்தும், உடனடியாக அவர்களுக்கு பாடசாலைகளை வழங்கக்கோரியும் இன்று 29.06.2016 புதன்கிழமை இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் ஆர்பாட்டம் ஒன்று காலை 10.30 மணியளவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் அதிகமான புதிய அதிபர்கள் கலந்துகொண்டனர். 


இது தொடர்பாக இ.ஆ.சங்கத்தின்பொதுச்செயலாளரிடம்கேட்டபோது-
அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுவுள்ளதாகவும், இதற்காக உபகுழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அதன் உப குறிப்பில் இரண்டுவாரங்களுக்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளதால் - இரு வாரங்களுக்குள் இவர்களுக்கான பாடசாலைகள் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உறுதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.




No comments:

Post a Comment