Monday, November 27, 2017

நாளை 28.11.2017 செவ்வாய்க்கிழமை – வவுனியா வடக்கு கல்விவலய அதிபர், ஆசிரியர்களுடன் - ஜோசப் ஸ்ராலின் சந்திக்கவுள்ளார்

வவுனியா வடக்கு கல்விவலய அதிபர் - ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நாளை 28.11.2017 செவ்வாய்க்கிழமை வவுனியா வடக்கு - வவு/மறுகரம்பளை அ.த.க.. பாடசாலையில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான இக் கலந்துரையாடலில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் - புதிய சம்பள மாற்றங்கள் - இடமாற்றங்கள் - மற்றும் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. வவுனியா வடக்கு  கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள்-  அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய முடியுமென வவுனியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment