Tuesday, October 2, 2018

தகுதியற்ற ஒருவரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!



கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக திரு.எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமையானது – கிழக்கு மாகாண  கல்விப் புலத்துக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும்.

முன்னர் -  கல்முனை, அக்கரைப்பற்று, மூதூர் போன்ற கல்வி வலயங்களில் இவர் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் கடமையாற்றிய அனைத்து வலயங்களிலும் முறைகேடுகளிலும் - அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டிருந்தார்.  அத்துடன் - ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் இவர் உட்படுத்தப்பட்டமையால் - இரண்டு வருடங்களுக்குரிய வருடாந்த சம்பள ஏற்றமும் நிறுத்தபட்டது.

யுனிசெப் நிதியினை கையாடல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டமை தொடர்பாக – நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினாலும் இவருக்கெதிராக சம்மாந்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படியான முறைகேடுகளிலும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்ட ஒருவரை மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமையானது தவறான நியமனமாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளராகவே இருப்பதற்கு தகுதியற்ற ஒருவரை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமை கிழக்கு மாகாண கல்வியை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும்.

திரு.எம்.கே.எம். மன்சூருக்கு வழங்கப்பட்டுள்ள தவறான நியமனத்தை - கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment