Tuesday, August 6, 2019

வடமாகாணத்தில் பரீட்சை வேளைகளில் மின்தடை - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் - வடமாகாணத்தின் பல பாகங்களில் அடிக்கடி இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக – மன்னார் மாவட்டத்தில் நேற்றைதினம் (05.08.2019) அன்று இரவு முழுவதும் மின்சாரம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் பல வருடங்களாக தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பரீட்சை வேளைகளில் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தும் வேளைகளிலும், பரீட்சை நடைபெறும் நாட்களிலும் கல்விச் செயற்பாடுகளைக் குழப்பும் விதமாக நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இலங்கை மின்சாரசபை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறையாக செயற்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment