மூத்த தொழிற்சங்கவாதியும் மிக இக்கட்டான காலகட்டங்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளராக இருந்து குரல்கொடுத்தவருமான தோழர் ச.தியாகலிங்கம் நேற்று 07.08.2019 இயற்கையெய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09.08.2019 மாலை 2.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்துக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
தோழர் தியாகலிங்கத்தின் மறைவிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அஞ்சலியை செலுத்துவதுடன் - அவரது குடும்பத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தோழர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்,
No comments:
Post a Comment