Friday, November 1, 2019

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அசமந்தம்; நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

வடமாகாணம், வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் -தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்திருந்தும்   - வவுனியா வடக்கு கல்வி அதிகாரிகளின் அசண்டையீனத்தினால் அவர்கள் வாக்களிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுத்திகதியான 04.10.2019 அன்று விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பாமல் 08.10.2019 இன் பின்னரே வலயக்கல்வி பணிமனையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 
இவர்களின் அசண்டையான தாமதம் காரணமாக நூறுக்கும் அதிகமான யாழ்மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகாரிகளின் அசண்டையீனங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி - இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
.

No comments:

Post a Comment