Wednesday, March 11, 2020

16,17,18 திகதிகளில் பணி பகிஸ்கரிப்பு; எந்த செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடமாட்டார்கள்!

எதிர்வரும் 16,17,18 திகதிகளில் இடைக்கால சம்பள அதிகரிப்புக்கான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு வலியுறுத்தி - அதிபர் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளது. இவ்விடயம் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டநிலையில் - வடமாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களில்- அன்றைய தினங்களில் சில பரீட்சைகளை நடத்துவதற்காக ஆசிரியர்களை - அதிகாரிகள் அழைத்து வற்புறுத்தும் நிலையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆசிரியர் அதிபர்களின் 20வருடத்துக்கும் அதிகமான பாதிப்புக்கள் தொடர்பாக - அக்கறை எடுத்திராத அதிகாரிகள் - அதிபர், ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராடும் போது - போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்து - காட்டிக்கொடுக்க முயலும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும். 16,17,18 திகதிகளில் நடைபெறும் பாடசாலை சார்ந்த எந்த செயற்பாடுகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் செல்லவேண்டிய அவசியமில்லை. அதற்காக அஞ்சத்தேவையுமில்லை. இலங்கை ஆசிரியர் சங்கம் முழுப் பொறுப்பேற்கும். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதக விளைவுகளுக்கு - வடமாகாண கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment