Sunday, July 16, 2017

19.07.2017 புதன்கிழமை - மடு கல்விவலய அதிபர் ஆசிரியர்களுடன் - ஜோசப் ஸ்ராலின் சந்திக்கவுள்ளார்

மடு கல்விவலய அதிபர் - ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19.07.2017 புதன்கிழமை ஆண்டாங்குளம் றோ.க. பாடசாலைக்கு அருகிலுள்ள - ஆண்டாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் - வடமாகாணத்தின் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ள - இக் கலந்துரையாடலில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் - புதிய சம்பள மாற்றங்கள் - இடமாற்றங்கள் - மற்றும் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. மடு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள்-  அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய முடியுமென மடுவலய இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment