இச்சந்திப்பின்போது – தற்போது நடைபெறவிருக்கும் பொது பரீட்சைக் கடமைகளில் மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. - இவ்வாறான இராணுவமயமாக்கலை அனுமதிக்க முடியாது என தொழிற்சங்க ஒன்றியத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் - தற்போது இலங்கை பாடசாலைகளில் 41000 ஆசிரியர்களும், 11000 அதிபர்களும் பணியாற்றுகின்ற நிலையில் - பரீட்சைக் கடமைகளுக்கு அண்ணளவாக 3000 பேரே தேவைப்படுவர். இவ்வாறான நிலையில் போதிய ஆளணியினர் உள்ளபோது - இராணுவத்தினரை பரீட்சைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியமற்றது எனவும் - இது இராணுவமயமாக்கல் செயற்பாடு எனவும், இதனை நிறுத்தவேண்டும் எனவும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் வலியுறுத்தினர்.
இவ்விடயம் தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லை என – பரீட்சை ஆணையாளர் உறுதிவழங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment