Wednesday, September 25, 2019

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் பல்லாயிரமாக திரண்டனர் அதிபர், ஆசிரியர்கள்!






ஆறு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது ஆசிரியர் தொழிற்சங்கங்கள்  இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

சம்பளம் முரண்பாடு , சம்பள உயர்வு உட்பட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்  ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிபர்களிதும் ஆசிரியர்களினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதாக கல்வி அமைச்சு பலமுறை எமக்கு உறுதி மொழி வழங்கிய போதிலும் அது நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

நாம் 26 ஆம் திகதி இன்று ஆரம்பித்துள்ள சுகவீன லீவு போராட்டத்திலும் - பேரணிகளிலும் - அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சம் இல்லாமல் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று காலை 11 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னர் சகல ஆசிரியர் தொழிற் சங்கங்களும் இணைந்து மாபெரும் ஆர்பாட்மொன்றை நடத்தினோம். இலங்கையின் சகல மாவட்டங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர் என்றும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment