Wednesday, January 8, 2020

வலிகாமம் பணிப்பாளருக்கெதிராக ஆர்ப்பாட்டம் : கல்வியமைச்சின் செயலாளருடனும் சந்திப்பு!


வலிகாமம் கல்வி பணி;ப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இடமாற்றங்கள் மூலம் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கை அசிரியர் சங்கத்தினால் இன்று புதன்கிழமை மாலை 2.30 மணியளவில் - நல்லூர் செம்மணிவீதியிலுள்ள - வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது – வலிகாமம் கல்வி வலயத்தில் நடைபெற்ற இடமாற்றங்கள் குறித்த பட்டயலின் அடிப்படையில் - ஆசிரியர்களுக்கு முறையற்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை குறித்தும், அதனால் பாதிப்படைந்துள்ளவர்கள் தொடர்பாகவும்,  வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து – மீளவும் இடமாற்றச்சபை கூடி – மேலதிக ஆசிரியர் ஆளணி, சுயவிருப்பு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்களுடன் அனைத்து இடமாற்றங்களையும் மீளாய்வு செய்யப்படும் எனவும், அதுவரை இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்திவைக்க நடவடிக்கை எடு;ப்பதாகவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.
அத்துடன் - பல வழிகளிலும் தனக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பாக – முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அங்கு பிரச்சினை உண்டென்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரை நேற்றைய  தினம் அழைத்து கலந்துரையாடியுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதனைத்;தொடர்ந்து -  வடமாகாண கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே – வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இருந்தபோது – எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால்- வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் - இலங்கை அசிரியர் சங்கத்தால் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
இதன்போது – அவற்றுக்குரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.



No comments:

Post a Comment