Wednesday, February 26, 2020

நாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்!



கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லை.

இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் - இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் - 
நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் - காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும் - மலையக பாடசாலைகளில் 8.00 - 2.00 மணிவரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை  மேற்கொள்வர்.
ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் - அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கமறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

உரியதீர்வு கிடைக்கவில்லையெனின் - மார்ச்மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இதனால் ஏற்படும்  பாதிப்புக்கள் குறித்து - தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது -ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் - ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Your Affiliate Money Making Machine is waiting -

    And getting it set up is as simple as 1, 2, 3!

    Here's how it works...

    STEP 1. Input into the system what affiliate products the system will promote
    STEP 2. Add PUSH BUTTON traffic (it takes JUST 2 minutes)
    STEP 3. See how the affiliate system grow your list and sell your affiliate products all by itself!

    Do you want to start making profits??

    The solution is right here

    ReplyDelete