Thursday, July 30, 2020

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு – இலங்கை ஆசிரியர் சங்கம் தலையீடு



வேம்படி மகளிர் கல்லூரியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேர்தல் கால அதிபர் நியமனம் தொடர்பாக – கல்வியமைச்சில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்புகொண்ட போது – தற்போது நியமிக்கப்பட்டவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், நிர்வாக மேன்முறையீட்டு தீர்பாயத்தின் (AAT) பரிந்துரைக்கமைவாக பிரதி அதிபராகவே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும். நிர்வாக விடயங்களில் அவர் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னர் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டவரே அதிபராக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் - நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராலேயே இவரே அதிபர் எனக் அறிமுகப்படுத்தி முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சை தொடர்பு கொண்ட போது - இந்த விடயத்தில் தலையிடுவதற்கு யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கல்வியமைச்சு இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலமாக முறையிடவுள்ளது. 

No comments:

Post a Comment