Wednesday, May 24, 2017

அதிபர் பிரச்சினைக்கு தீர்வுவேண்டி கொழும்பில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம்: நாளை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!


2009.11.13 ஆந் திகதி அதிபர்சேவை 2-1இ 3 தரத்திற்கான நியமனம் பெற்ற அதிபர்கள் புதிய பிரமாணக் குறிப்பின்படி அதிபர் வகுப்பு 2, 3 ஆகியவற்றுக்கு உள்வாங்கப்பட வேண்டியதுடன் 2015.11.13ஆந் திகதிமுதல் முதலாம் - இரண்டாம் தரங்களுக்கு தரமுயர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். பதவியேற்று 6 வருடங்கள் ஆனபோதும் அவர்களுக்கு இரண்டுவருடங்களுக்கு மேலாக அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் கல்வியமைச்சு இதுவரையும் பதவியுயர்வைபெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான எவ்விதமுயற்சியையும் மேற்கொள்ளாததினைக் கண்டித்தும் - செயற்படுத்துவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்குமாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (24.05.2017) ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்காக விகாரமாதேவி மைதான திறந்தவெளி அரங்கில்  - இலங்கையின் பலபாகங்களிலும் இருந்தும் பல நூற்றுக் கணக்கான அதிபர்கள் கூடி கலந்துரையாடினர். பின்னர் - அலரி மாளிகைக்கு ஊர்வலமாக தமது கோரிக்கைக் கோசங்களுடன் சென்று – தமது மனுவை பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவிடம் கையளித்தனர். இதன்போது – பிரதமரின் தற்போதைய ஆலோசகரும் முன்னாள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருமான ததல்லகேயும் உடனிருந்தார். பிரதமரின் செயலாளர் உடனடியாக கல்வியமைச்சின் செயலாளரைத் தொடர்புகொண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாளை (25.05.2017) காலை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் - இச்சந்திப்பில் பிரதமரின் ஆலோசகரான ததல்லேயும் கலந்துகொண்டு பிரச்சினைதொடர்பாக ஆராயவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment