Monday, May 29, 2017

மூதூர் தெருவெளி அ.த.க பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


மூதூர் கல்வி வலயத்துக்கு உட்பட்ட - தெருவெளி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோக செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தைத் தெரிப்பதோடு – குற்றவாளிகள் சட்டத்தின் முன் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் நிகழ்வது – பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.  எனவே – பாடசாலைகளின் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்  இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு  எவ்வித பாரபட்சமுமின்றி – அதி உச்சத் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

No comments:

Post a Comment