Friday, October 6, 2017

அதிபர் ஆசிரியர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆசிரியர் தினமான இன்று கொழும்பில் கவனயீர்ப்பு



அரசாங்கம்  மற்றும் அதிகாரிகள்  - ஆசிரியர் அதிபர்களது அடிப்படைத் தேவைகளை நடமுறைப்படுத் துவதில்லை. - ஆசிரியர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் -  போலி விளம்பரங்கள் மூலமாக ஆசிரியர்,  அதிபர்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஆசிரியர் தினமான இன்று (06.10.2017) கொழும்பு வலயக் கல்விப் பணிமனைக்கு அருகில்  மாலை 2.30 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 2014 ஒக்டோபர்மாதம் வெளியிடப்பட்ட - புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பிலும் , புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிலும் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. 16/2017 சுற்றறிக்கையின்படி அதிபர்களின் சம்பளம் 6500 ரூபாவரை உயர்த்தப்பட்ட நிலையில் - ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைவிட - ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளை வழங்காமை, வருடாந்த சம்பள
ஏற்றங்களை உரிய நேரத்தில் செயற்படுத்தாமை,  ஆசிரியர்களின் சேவைக்கால செயலமர்வுகளை முறைப்படி திட்டமிடாமல் நடத்துதல்,  ஆசிரியர்களின் 10 மாத கடன்தொகையை வழங்குவதில் இழுத்தடிப்ப செய்தல் , பரீட்சைப் பெறுபேறை அதிகரித்தல் எனும் பெயரில் நடைமுறைசாத்தியமற்ற நிபந்தனைகளை திணித்தல். போன்றவற்றுடன்
 ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை மதிக்காது - நசுக்கத்துடிக்கும் அதிகாரத்தரப்பு - ஆசிரியர்தினத்தை கொண்டாடுவதாக போலி முகங்களையே காட்டுகின்றன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன்- ஆசிரியர்களின் உரிமைகள் கிடைக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தக் கவனயீர்ப்பு  நடைபெற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment