Sunday, October 29, 2017

"இலங்கை ஆசிரியர் சங்கத்தின்" அங்கத்துவம் தொடர்பாக - ஆசிரியர்களின் கவனத்துக்கு …!



ஆசிரியர்கள் தாம் அங்கத்துவராக சேர்ந்துகொள்ளும்போது -  தாம் அங்கத்துவம்பெறும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பாக – அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

EDCS (கல்வி ஊழியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம்)  என்பது ஒரு கூட்டுறவுச் சங்கம் ஆகும். அது ஒரு சுயாதீனமான கூட்டுறவுச் சங்கம் ஆகும். அதில் - எந்தத் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுபவர்களும் அல்லது அங்கத்துவம் பெறாத ஆசிரியர்களும் கூட – தனக்கென கணக்கினை ஆரம்பித்து – தமக்குரிய சேவைகளை ஏனைய வங்கிகளைப் போன்றே பெற்றுக்கொள்ள முடியும். –EDCS வங்கியின் சுயாதீன செயற்பாடுகளுக்காக - எந்தவொரு தொழிற்சங்கத்திலும் இணைந்திருப்பது அவசியமில்லை. 
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் விளக்கேற்ற காத்திருக்கும் ரில்வின் சில்வா – ஜே.வி.பி.


மாநாட்டு மண்டபத்தில் ரில்வின் சில்வா
ஆனால் -EDCS என்பது தமது சங்கத்தின் வங்கி எனக் கூறியும் - தமது சங்கத்தில் இணைந்தால்தான் - வங்கி வழங்கும் சலுகைகளைப் பெறமுடியும் எனக் கூறியும் - தமது “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கத்தில் தமிழர் விரோதப் போக்குடைய இனவாத – ஜே.வி.பி. கட்சியினர் - வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு சென்று – தமது வங்கியூடாக கடன்வசதி செய்துதருவதாகவும் - கடன்வசதி பெறுவதற்கு தமது சங்கத்தில் இணைந்திருப்பது அவசியமெனவும் கூறி  -  மோசடியான முறைகளில் - ஆசிரியர்களை இணைத்து வருகின்றனர்.  இத்தகைய செயற்பாடு கண்டனத்துக்குரியதாகும்.

அதுமட்டுமல்லாமல் - சில ஆசிரியர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் “இலங்கை ஆசிரியர் சங்கம்” மும் “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கமும் ஒன்று எனப் பொய்யான பரப்புரைகளையும் செய்து மடு,  மன்னார் போன்ற மாவட்டங்களில் ஜே.வி.பி.யினர் ஆசிரியர்களை இணைத்துள்ளனர். 

இதே ஜே.வி.பி கட்சியினர் தான் -   வடகிழக்கு மாகாணமாக இருந்த பிரிக்கமுடியாத தமிழர் பிரதேசத்தை வடக்கு – கிழக்கு மாகாணங்களாகப் பிரிப்பதற்கு வழக்குப்போட்டவர்களாவர் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. 

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக – முழுமையாக செயற்பட்ட ஜே.வி.பியினர் – தற்போது - தமது கட்சியை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வளர்ப்பதற்காக – EDCS கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான வாகனங்களையும், அதன்சாரதிகளையும் மோசடியான முறையில் பயன்படுத்தி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயற்பாட்டுக்கு பயன்படுத்தி வருவது தொடர்பாகவும் - கூட்டுறவுச் சங்க செயலாளருக்கும் எழுத்துமூலமாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

EDCS க்கு சொந்தமான வாகனத்தில் சென்று ஆசிரியர்களை தமது சங்கத்தில் இணைக்கும் மோசடி  

இந்த நிலையில் - “இலங்கை ஆசிரியர் சங்கம்” இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் எவ்விதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பெயரைப் பாவித்து ஜே.வி.பியினரால் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற ஆசிரியர்களுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் எவ்வகையிலும் பொறுப்புக்கூறல் கொண்டிருக்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment