Tuesday, October 31, 2017

பல்கலை மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.


தமிழ் அரசியல் கைதிகளை – அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் -;  உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் - அதனை  இழுத்தடிப்பின்றி உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என்று – அரசையும் - பொறுப்புக்கூறவேண்டிய தமிழ் தரப்பினரையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட - பொதுஅமைப்புக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை - அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது – தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு - தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே – மாணவர்களை அச்சுறுத்தல் மூலம் நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் - தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பார். அத்தகைய வரலாற்று அவமானத்தை  எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது.

எனவே – அரசியல் கைதிகள் - அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து - இணைக்கப்பட்ட பொதுஅமைப்புக்களுடன் இணைந்து அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் என்னும் வகையில் - யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரித்து நிற்கின்றது.

No comments:

Post a Comment