Friday, October 28, 2016

03.11.2016 ஆம் திகதி முல்லைத்தீவு ஆசிரியர்களுடன் ஜோசப் ஸ்ராலின் சந்திப்பு - திகதி மாற்றம்


முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - 25.10.2016 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் - யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பாக அனுசரிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. பின்னர் இக்கலந்துரையாடல் 01.11.2016 செவ்வாய்க்கிழமை நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் - அன்றைய தினம் - கல்வி நிர்வாக அமைச்சில் திடீரென சந்திப்பு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டமையினால் - பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வருகைதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக – 03.11.2016 வியாழக்கிழமை மாலை 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் சந்திப்பு இடம்பெறும். இம் முக்கிய சந்திப்பில் ஆசிரியர்கள் கலந்து பயன்பெறமுடியும்.

No comments:

Post a Comment