யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், மாணவர்களின் படுகொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மற்றும் நீதி கோரியும் நாளை 25.10.2016 நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தார்மீக ஆதரவினை வழங்குகின்றது. அன்றைய தினம் பாடசாலைகளின் செயற்பாடுகளையும் நிறுத்து கல்விச்சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
இதேவேளை -
பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக தெற்கின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று 24.10.2016 கொழும்பு புறக்கோட்டையில் மாலை 2.00 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment