Thursday, June 1, 2017

நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் நான்கு லட்சம் கட்டிய பணிப்பாளர் மாலினி வெனிற்றன்: விசாரணை பற்றி கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.


தற்போது மடு கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெளிற்றன் - முன்னர் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகவிருந்து – அவருக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் - விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
இவ்விசாரணை இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிதி மோசடி தொடர்பாக – விசாரணைக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன?, விசாரணைக் குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்ன? என்பது தொடர்பாக - இதுவரை வடமாகாண கல்வியமைச்சால் வெளியிடப்படாத நிலையில் - அவர் மடு வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் – ஏறத்தாள நான்கு இலட்சங்கள் பணமாக செலுத்தி பற்றுச்சீட்டு வழங்கிய பின்னரே நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றோம்.
எனவே – திருமதி மாலினி வெனிற்றனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் - விசாரணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு  - எடுத்த நடவடிக்கை தொடர்பாக வடமாகாண கல்விச் சமூகத்துக்கு வடமாகாண கல்வியமைச்சு தெளிவுபடுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment