Thursday, June 15, 2017

நாளைய (16.06.2017) ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் ஆதரவு



வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டை கண்டித்து நாளை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்குவதாக புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் நேதாஜி தெரிவித்தார்.
நாளை (16.06.2016) பாடசாலை செயற்பாடுகளை நிறுத்தி – அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் நிற்குமாறும். பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாது – வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை – நாளை காலை 10.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடுசெய்யப்பட்ட - முதலமைச்சருக்கு ஆதரவாக நல்லூரில் ஒன்றுகூடும் செயற்பாட்டில் பொதுமக்கள், அதிபர் ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறும் வடமாகாண புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.  

No comments:

Post a Comment