இந்நிலையில் - இன்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் - இலங்கை கல்வி நிர்வாகசேவை, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க அனைத்துப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இதனால் - திட்டமிட்டவாறு நாளைய தினம் (04.07.2018) புதன்கிழமை – நாடு தழுவிய ரீதியில் கல்வியியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் - பத்தரமுல்லவில் அமைந்துள்ள புத்ததாஸ விளையாட்டு அரங்கிலிருந்து – மத்திய கல்வியமைச்சு அலுவலகத்தை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் - மத்திய கல்வி அமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment