Saturday, October 6, 2018

ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு பற்றிய கருத்தமர்வு இன்று நடைபெற்றது


ஆசிரியர் தினமான இன்று 06.10.2018 சனிக்கிழமை  அதிபர் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் கருத்தமர்வு ஒன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யா/வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின்  சம்பள அதிகரிப்பு தொடர்பாக - சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும், சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆசிரியர் அதிபர் பதவியுயர்வுகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கருத்தமர்வில் ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு என்பது என்ன? என்னும் தலைப்பிலான கையேடும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment