கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு - வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கபட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி - ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கு - நாளை திங்கட்கிழமை (23.01.2017) காலை 9.00 மணிக்கு - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறும். அத்துடன் இக்கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இப்போராட்டத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சிவில் சமூக அமைப்பு, ஆகியவையும் ஆசிரியர்களின் பணித்தடை நீக்கும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment