Sunday, January 29, 2017

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரவுள்ள பிரேரணை பக்கச்சார்பானது ஆதாரமற்ற பிரேரணையை அவர் விலக்கிக்கொள்ள வேண்டும்.


வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரவுள்ள பிரேரணை பக்கச்சார்பானது
ஆதாரமற்ற பிரேரணையை அவர் விலக்கிக்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 31.01.2017 நடைபெறவுள்ள 83 வது வடமாகாணசபை அமர்வில் கௌரவ எதிர்க்கட்சித்தலைவரும் ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினருமான சி.தவராசாவினால் - வடமாகாணக் கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்தமையைக் கண்டித்து வடக்கு மாகாணசபையில் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். அதில் - வடமாகாண கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்ததாகவும், கல்வியமைச்சின் செயலாளரின் கொலரைப் பிடித்துள்ளனர் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தியுள்ளமை - வடமாகாண கல்வியமைச்சு மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கிய – தவறான பணித்தடையினை நியாயப்படுத்தும் செயற்பாடாகும்.
வடமாகாண கல்வியமைச்சில் நடைபெறும் அநீதிகள், பாரபட்சங்கள், இடமாற்ற முறைகேடுகள், ஆசிரியர்களுக்கு உரித்தான சம்பளஏற்றங்கள் மற்றும் நிலுவைகள் வழங்கப்படாமை தொடர்பான ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - வடமாகாண கல்வியமைச்சின் சீர்கேடுகள் தொடர்பாகவுமே எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணை கொண்டுவந்திருக்கவேண்டும். அத்துடன் - 10.01.2017 அன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக – பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் - இரண்டு பக்க நியாயங்களையும் அறிந்து செயற்பட்டிருக்கவேண்டும். எனவே – வடமாகாண கல்வியமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் , ஆசிரியர்களின் ஜனநாயக உரிமை நசுக்கப்பட்டமை தொடர்பாகவும் எதிர்கட்சித் தலைவர் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment