Monday, January 16, 2017

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் 40 புள்ளிக்குரிய தாமதங்களே பரீட்சை பெறுபேறு வெளியிடமுடியாமைக்கான காரணம் --- பரீட்சை ஆணையாளர் ஜோசப் ஸ்ராலினிடம் தெரிவிப்பு


ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயின்ற மாணவர்களின் பெறுபேறுகள் தாமதமாவது தொடர்பாக –இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பரீட்சை ஆணையாளருடன் தொடர்புகொண்டு - 2016 மார்ச் மாதம் பரீட்சை நடைபெற்ற நிலையில் இனியும் தாமதிக்காமல் பெறுபேற்றினை வெளியிடுவதற்கு உடனடிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதன்போது – பரீட்சைத் திணைக்களத்தினால் 60 புள்ளிக்குரிய செயற்பாடே மேற்கொள்ளப்பட்டது எனவும், மிகுதி 40 புள்ளிகளுக்குரிய செயற்பாடுகள் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளாலேயே அனுப்பப்படவேண்டும் எனவும் - அவ்வாறு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதங்களுடன் - சில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து அனுப்பப்பட்ட பெறுபேற்று தரவுகளிலும் தவறுகள் காணப்பட்டமையினால் மீண்டும் திருப்பி அனுப்பி பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டன எனவும் - அவை சீர்செய்யப்பட்டு வருகின்றன எனவும், இவ்வாறான தாமதங்களே பெறுபேற்றை வெளியிடுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் - தற்போது இவை சீர்செய்யப்பட்டு வருவதால் விரைவில் இப்பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் எனவும் - இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருக்கும் முறையிட்டுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment