Friday, February 17, 2017

3 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண கல்விப்பணிப்பாளரினால் 3ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு சம்பளமும் வழங்கப்படும். ஆசிரியர்கள் செயலாளரைத்தாக்கிய குற்றம் நீக்கப்பட்டு - கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக - ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
பணித்தடை விலக்கக்கோரி கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டமை - ஆரம்பக்கட்ட விசாரணைக்காக தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment