Tuesday, February 7, 2017

புதிய அதிபர்களை பதவி விலக வற்புறுத்தும் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

புதிய அதிபர்களை பதவி விலக வற்புறுத்தும் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வடமாகாண கல்வியமைச்சினால் புதிதாக நியமனம் பெற்ற தரம் 3 அதிபர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை நியமனங்களை குழப்பி – அவர்களை குறித்த பதவியை இராஜினாமா செய்து – தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விட்டுக்கொடுக்குமாறும், அவ்வாறு விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விரும்பிய பாடசாலைகளை வழங்குவதாகவும் கூறி – வடமாகாண கல்வி அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக குறித்த சில அதிபர்களால் எமது சங்கத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கல்வி வலயங்கள் ஊடாக அவர்களை அழைத்து அவர்களை சம்மதக்கடிதம் தருமாறு வற்புறுத்தும் செயற்பாடுகளிலும் சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் செயற்பட்டுவருகின்றமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட அதிபர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


No comments:

Post a Comment