Wednesday, February 8, 2017

கேப்பாப்பிலவு புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்துள்ளது.


முல்லைத்தீவு பிரதேசத்தில் தாம் வாழ்ந்த சொந்தக் காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் - இன்று 08.02.2017 போராட்டக்களத்தில் மக்களுடன்; இணைந்து ஆதரவு தெரிவித்து வருகின்றர். இம்மக்களது கோரிக்கையை நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசும் - தமிழ் அரசியல் தலைமைகளும் உடனடியாக நிறைவேற்றவேண்டும்.  இம்மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மக்களின் காணிகளிலிருந்து படையினரை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment