Sunday, February 26, 2017

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டக்களத்தில் இன்று வடக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் பங்கேற்பு


இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள்ஒன்றிணைந்து - முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் - கேப்பாப்பிலவு சிறுவர்களுக்கும் உளவள செயற்பாடுகளை வழங்கினர்.


மேலும் - கேப்பாப்பிலவு காணியை விடுவிப்பதற்காக – தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களுக்காக காலைமுதல் மாலைவரை போராட்டக் களத்தில் தங்கியிருந்து - இன்றைய மதிய உணவுகளுக்கான பொருட்களையும் வழங்கி – போராட்டக்களத்திலுள்ள மக்களுடன் இணைந்து  மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம், நாடகம், விளையாட்டுக்கள், பாடல்கள் போன்றவற்றுடனான ஆற்றுப்படுத்தல்களிலும் ஈடுபட்டனர்.

இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சிதெரிவித்தனர். அத்துடன் - சில நல்லுள்ளங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் மக்களுக்கு கையளித்தனர்.

 இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்தும் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்  மற்றும் வடக்குமாகாண புதிய அதிபர்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment