Monday, April 24, 2017

27 ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் இணைந்து எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது தார்மீக ஆதரவினைத் தெரிவிக்கின்றது.

வடமாகாணத்தில் - பல நாட்களாக மக்கள் தமக்கு சொந்தமான நில மீட்புக்காகவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.; இத்தகைய பாதிக்கப்பட்டுள்ள மக்களினால் மேற்கொள்ளப்படவுள்ள - மக்கள் மயப்படுத்தப்பட்ட நீதிவேண்டிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது அனைத்து சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கங்களினதும் தார்மீகக் கடமையாகும்.

அத்துடன் – மக்களின் நீதிவேண்டிய நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக – அனைத்து சக்திகளும் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment