Saturday, April 29, 2017

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் - ஆசிரியர்கள், அதிபர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்மக்களின் ஒன்றிணைந்த மேதினம்


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரங்க செயற்பாட்டுக்குழு, தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டுமையம், சமூக விஞ்ஞான ஆய்வுமன்றம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் மே தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இம்மேதின ஊர்வலம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஆத்திசூடி வீதி, பலாலிவீதி, பரமேஸ்வரா வீதி ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடையும். இறுதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரையும் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது. இம்மேதின நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்  மக்கள், தமிழ்தேசிய சக்திகள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரையும் கலந்துகொண்டு தொழிலாளர் உரிமைக்கு பலம்சேர்க்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment