Saturday, April 8, 2017

வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலனுக்கு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - தனக்கு மீண்டும் மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் அநீதியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு விண்ணப்பம் விசாரணைக்கு நீதியரசர்களான மடவெல மற்றும் தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் 06.04.2017 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மீளாய்வு விண்ணப்ப விசாரணையின்போது – மனுதாரர் சார்பில் உரிமை மீறல் நிகழ்ந்திருப்பது தொடர்பான விசாரணைக்கு எதிர்மனுதாரர்களான – வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோருக்கு மே மாதம் 18 ஆம் திகதிக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு மீளாய்வு மனு மேன்முறையீட்டு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலன்-  ஏற்கனவே மன்னார் வலயத்தில் வெளிமாவட்ட சேவையினை பூர்த்திசெய்திருந்தார் - இதுவரை இடமாற்றச் சபையினுூடாக முறையாக இடமாற்றம் வழங்கப்பட்ட எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை . மன்னார் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாகவும், யாழ்மாவட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையாகவும் இருந்ததனால்; மூன்று வருடங்கள் வெளிமாவட்டத்தில் பூர்த்தி செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபையின் தீர்மானத்திற்கமையவே முறைப்படி நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாகவும். ஆயினும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் – குறிப்பிட்ட ஒருவரின் பழிவாங்கல் நோக்கத்துக்காக தன்னை மீண்டும் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கியிருந்தார் எனவும் - இவ்விடமாற்றம் தவறானது எனவும் - இடமாற்றச்சபையினால் யாழ்மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் - இடமாற்றச்சபையின் அங்கீகாரம் இன்றி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் மீண்டும் இடமாற்றம் வழங்கியுள்ளமை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் தெரிவித்து – யாழ்.மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி கடந்த மாதமளவில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது – நீதிபதி இளஞ்செழியனால் இம்மனு விசாரணையின் பின்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முடிவு தவறானது எனக் குறிப்பிட்டே – மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்ப மனு தாக்கல் செய்யப்பட்;டிருந்தமையும் - இந்த மீளாய்வு விண்ணப்பத்தின் மீதான மேன்முறையீடு இதற்கு முன்னரே மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment