Wednesday, May 6, 2020

பழிவாங்க முயலும் செயற்பாடுகளை- துணுக்காய் வலய பணிப்பாளர் நிறுத்தவேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -


துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் - கொவிட் -19 நிதிக்காக - ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவது தொடர்பாக - சம்மதத்துக்கான கையொப்பம் பெறும் கடிதத்துடன் - கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் - ''இப்படிவம் சமர்ப்பிக்காத பாடசாலைகளுக்கு மே மாத சம்பளப் பட்டியல் வழங்கப்படமாட்டாது'' என எழுத்துமூலம் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு குறிப்பிட்டமை - ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் - நிதிப் பிரமாண நடைமுறைகளுக்கும் முரணானதாகும்.

இவ்விடயம் தொடர்பாக - எமது துணுக்காய் கல்வி வலயத்தின் செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டு - அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் - எமது துணுக்காய் வலய செயலாளரை - தொலைபேசிமூலம் அச்சுறுத்தியதோடு - பழிவாங்க முயலும் செயற்பாடுகளிலும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஈடுபட்டுள்ளமை - ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தையும்,
தொழிற்சங்க உரிமைகளை நசுக்கமுயலும் - மிகமோசமான செயற்பாடாகும்.

தமது சம்பளங்களில் - முறையற்ற விதமாக அதிகாரிகள் கைவைக்க முயலும்போது - ஆசிரியர்கள் மௌனிகளாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் செயற்பட முனையும் - துணுக்காய் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.

எமது சங்கத்தின் செயலாளரை பழிவாங்கும் செயற்பாடுகளில் - துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் ஈடுபடுவாராயின் - தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாததாக அமையும் என - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment