Tuesday, May 5, 2020

இ.ஆ.சங்கத்தின் தலையீட்டால் மீளளிப்பு செய்யப்பட்ட EDCS கடன்தொகை!


கொரோனா நெருக்கடி நிலை காரணமாக - வங்கிகளில் பெறப்பட்ட சிறு கடன்தொகைகளுக்கான சலுகைகள் வழங்குமாறு அரசு அறிவித்திருந்தது.
 மத்தியவங்கியின் தாமதமான அறிவுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்பட்ட சம்பளங்களிலிருந்தும் - வங்கிகள் கடன் தொகையை அறவிட்டிருந்தன.

இந்நிலையில் - ஆசிரியர்களை அதிகமான அங்கத்தவர்களாக கொண்டு இயங்கும் கல்வி அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும் <EDCS> கடன்தொகைகளை அறவிட்டிருந்தது.

ஏப்ரல் மாதச் சம்பளத்திலிருந்து கழித்த கடன் தொகையை மீள செலுத்துவதாக ஏப்ரல் 23 ஆம் திகதி -  நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் ஆசிரியர்களிடமிருந்து படிவங்களைப் பெற்றிருந்து.
ஆயினும் - இன்றுவரை கழித்த தொகை ஆசிரியர்களின் கணக்கில் மீளளிப்பு செய்யப்படாமல் இருந்துள்ளது.



ஆயினும் - ஒரு சிலருக்கு மட்டும் - மீளளிக்கப்பட்டுள்ளதாகவும் - அந்த மீளளிப்புக்கு நுவரெலியா மாவட்ட  EDCS இல் பணியாற்றுபவர்களும், EDCS தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களும் - ஆசிரியர் சிலரிடம் சிறு தொகைப்பணம் பெற்று - அவர்களுக்கு மீளளிப்பு செய்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டிருந்தனர்.

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரச்செல்வன் உட்பட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் -பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக சென்று  -நுவரெலியா மாவட்ட  EDCS நிர்வாகத்துடன் கலந்துரையாடினர். விவாதங்களினையடுத்து - உடனடியாகவே ஆசிரியர்களின் பணத்தை நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் மீளளிப்புச்செய்துள்ளதோடு.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையையடுத்து மீளளிப்புச் செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment