Sunday, June 19, 2016

தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்திய அதிபர்களின் நியமனம் தாமதமாவதைக் கண்டித்து 29.06.2016 புதன்கிழமை இசுறுபாய கல்வியமைச்சின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து – சேவை முன்பயிற்சிகளையும் நிறைவுசெய்து 3859 அதிபர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 17.06.2016 அன்று கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க பாடசாலையில் வைத்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் தற்காலிக நியமனக் கடிதமே வழங்கப்பட்டது.
இதுவரை - இவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாடசாலைகள் திட்டமிடப்படவில்லை.

அதேவேளை - அதிபர் சேவை பிரமாணக்குறிப்புக்கு மாறாக – போட்டிப்பரீட்சையில் சித்தியடையாதவர்களை அதிபர்களாகவும் தரம்பெற்றவர்களை தரம் குறைந்த பதவிகளிலும் அமர்த்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை.
இத்தகைய நிலையில் - தேவையற்ற தலையீடுகளை நிறுத்தி -  தரம் பெற்ற அதிபர்களுக்கு அதிபர் வெற்றிடமுள்ள பாடசாலைகளை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி - எதிர்வரும் 29.06.2016 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இசுறுபாயவில் உள்ள கல்வியமைச்சின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஈடுபடவுள்ளது. அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பொருத்தமான பாடசாலைகள் கிடைக்கப்பெறாதவர்களை இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments:

Post a Comment