Sunday, June 5, 2016

தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முறைகேடுகள் - வடக்கு கல்வியமைச்சு அசமந்தப்போக்கு - விசாரணைகள் தாமதம் - கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவகாசம் வழங்கி இ.ஆ.சங்கம் கடிதம்

செயலாளர்  01.06.2016
கல்வி பண்பாட்டலுவல்கள்- விளையாட்டுத்துறை அமைச்சு
வட மாகாணம்.
யாழ்ப்பாணம்.
அவர்களுக்கு

தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முறைகேடுகள்
தொண்டமானாறு வெளிக்கள நிலையமானது - 1968 ஆம் ஆண்டு – பாடசாலை மாணவர்களிடையே களக் கற்கைநெறிகளை ஊக்குவிக்கும் - ஏனைய கல்விசார் இலக்குகளுடனும்; தொலைநோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 40 வருடங்களாக இந்நிலையம் வடமாகாணத்தின் கல்வித்துறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. மிகவும் வெளிப்படையான – ஜனநாயகத் தன்மையுடன் செயற்படவேண்டி 01.01.1978 இல் இந் நிலையத்துக்கான யாப்பு மீளமைக்கப்பட்டது. (யாப்பின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
ஆனால் - இன்று இந்நிலையத்தின் செயற்பாடுகள் - சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை தாங்கள் அறிந்தும் - அதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளமை வடமாகாணக் கல்வியில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். 
வடமாகாணத்தின் அனைத்து பரீட்சைத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும் இந்த நிலையத்தில் நிலவிவரும் முறைகேடுகள் தொடர்பாக - இந்நிலையத்தி;ல் கரிசனை கொண்ட குழுவினால் 14.12.2015 அன்று தங்களை நேரில் சந்தித்து தௌவுபடுத்தப்பட்டு – நீங்கள் அறிவுறுத்தியதற்கிணங்க 18.12.2015 திகதியிடப்பட்ட எழுத்துமூல ஆவணம் ஒன்று அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
அத்துடன் - புதிய நிர்வாகத்தெரிவானது - இந்நிலையத்தின் யாப்பினடிப்படையில் தை மாதம்; இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை இடம்பெறவில்லை. ஆறுமாதம் கடந்த நிலையிலும் - வடமாகாணக் கல்வியில் பெரும் பங்காற்றும் ஒரு நிலையத்தை - தனிப்பட்ட ஒருவரின் கையில் சட்டவிரோதமான முறையில் செயற்படுத்த அனுமதித்தமை மிகத் தவறானதாகும்.
இந்நிலையத்தின் யாப்புக்கமைவாக – பரீட்சைக்குழுக் கட்டமைப்பு ஒன்று இருந்துள்ளது. ஆனால் இன்று தனிப்பட்ட ஒருவரிடம் மட்டும் வடமாகாணத்தின் பரீட்சைகளை அடகுவைத்து பொறுப்பற்ற செயற்பாடுகளை – வடமாகாணக் கல்வியமைச்சு மேற்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 
எனவே – தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தில் நிலவும் முறைகேடுகள் உடனடியாகக் களையப்பட்டு – புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவேண்டும். அத்துடன் - நிலையத்தின் யாப்புக்கமைய ஏனைய செயற்பாடுகளும் ஜனநாயகத் தன்மையுடன் செயற்படுத்தப்பட ஆவன செய்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 
அடுத்துவரும் - ஒருமாத காலத்துக்குள் இச்சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து – வடமாகாணக் கல்வியை பாதுகாக்கும் நோக்கில் - பொறுப்புள்ள ஆசிரியர் தொழிற்சங்கம் என்னும் வகையில் - தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியேற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.  


செயலாளர் 
யாழ்.மாவட்டம்  

படிகள்:
1. கௌரவ முதலமைச்சர் – வடமாகாணம் 
2.கௌரவ கல்வியமைச்சர் – வடமாகாணம் 

No comments:

Post a Comment