Friday, June 10, 2016

புதிதாக நியமனம் பெறவிருக்கும் தரம் - 3 அதிபர்களை - முட்டாள்களாக்கவிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சு


தற்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தரம் -3 அதிபர்களிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் பயிற்சி நிறைவடைந்து – அதிபர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் - கடமைநிறைவேற்று அதிபர்களாக ஆசிரியர் தரத்துடன் இருப்பவர்களை – அதே பாடசாலைகளில் வைத்துக்கொண்டு – தகுதியான அதிபர்களை 1ஏபி 1 சி பாடசாலைகளில் உப அதிபர்களாகவும் பிரதி அதிபர்களாகவும் - சில செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு அதிபர்களாகவும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்காக – சில வலயங்களில் புதிய நியமனம் பெறவுள்ள சில அதிபர்களுக்கு வதிவிடத்துக்கு அண்மையிலும் பாடசாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் வடமாகாணத்தின் முழுக் கல்வியையும் பாதிக்கும் என அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் - 26.05.2016 வடமாகாண சபையில் கடமைநிறைவேற்று அதிபர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முறையற்ற பிரேரணையை செயற்படுத்துவதற்காகவும் - புதிய அதிபர்களினால் தமக்கு சட்டச்சிக்கல்  ஏற்படக்கூடும் என்னும் அச்சத்தினாலும் - சூழ்ச்சியான செயற்பாட்டில் -  இவ்வாறு சாதகமாக பாடசாலைகளை வழங்குவது போன்று வடமாகாண கல்வியமைச்சு காட்டப்போகின்றது.
ஆனால் - இது தற்காலிகமாகவே வழங்கப்படவுள்ளது என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

இனிவரும் காலங்களிலும் - கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு 22.10.2014 ஆம் திகதிகொண்ட 1885-31 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பு - ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படும் கடமைநிறைவேற்று அதிபர் பிரச்சினைக்கு சட்ட அங்கீகாரத்தைக் கொடுக்கப்போவதில்லை -  என்பதையும் வடமாகாணக் கல்வியமைச்சு  நன்கு அறியும்.

இந்தநிலையிலும் – தற்போது போலியான சேவை நிலையங்களை வழங்கி – மீண்டும்; பல முறைகேடுகளுடாகவே சேவைநிலையங்களை - புதிய அதிபர்களுக்கு பகிரப்படுகின்ற ஆபத்தான நிலையுள்ளது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்புடன் தெரிவிக்கின்றது.

தரம்பெற்ற அதிபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்க - இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் வாரமளவில் சட்டநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. தற்போது கிடைத்துள்ள சேவைநிலையத்தை மட்டும் சாதகமாக கொள்ளாது. இனிவரும் காலங்களில் நிகழவிருக்கும் சூழ்ச்சிகளுக்கு உட்படாமல் அதிபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – வடமாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற தரம் - 3 அதிபர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் ஆலோசனை பெறமுடியும் என பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு – 0777246222  -  0776622082

No comments:

Post a Comment